“சுஷாந்த் சிங்”கை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்த மற்றுமொரு நடிகர் தற்கொலை.! சோகத்தில் ரசிகர்கள்.!!
தல தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்த இன்னுமொரு நடிகர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்த சுசாந்த் சிங் கடந்த வருடம் திடீரென தற்கொலை செய்துகொண்டார்,
இது கொலை என அவரது ரசிகர்களும் குடும்பத்தினரும் கூறிவந்த நிலையில் சிலர் சாட்சிகள் தற்கொலை என்று முடித்தது. இந்த நிலையில் இதே திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த, சந்தீப் என்பவர் நேற்றைய தினம் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மும்பையில் உள்ள தனது வீட்டில் சுசாந்த் சிங்கை போல் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
ஆனால் இவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா காலத்தில் பணவரவு குறைவு இதனால் குடும்பத்தில் நிம்மதி இல்லை, மனைவி என்னை நிம்மதியாக இருக்க விடுகிறார் இல்லை, தினமும் மனைவியுடன் சண்டை இந்த வாழ்க்கை எனக்கு வெறுத்து விட்டது.
அதனால் தற்கொலை செய்துகொள்கிறேன், தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல, நானே காரணம் பணம் கொட்டி கொடுக்கும் வரை தான் மனிதர்கள் தேவை பின் யாரும் தேவை இல்லை இது தான் வாழ்க்கை. என் மரணத்திற்கு வேறு யாரும் காரணம் இல்லை என வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.