உடல் உறுப்பு பெரிதென கிண்டலடித்தார்கள்..அதற்காக வெட்டியா வீச முடியும்? அது தான் விலகிக் கொண்டேன்” நடிகை பூமிகா பேட்டி.!!
தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் மிகவும் பிடித்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை பூமிகா. ரோஜாக் கூட்டம் திரைப்படத்தில் அழகிய தேவதையாக நடித்த பூமிகா அதன் பின் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்தார். சூர்யாவுடன் இணைந்து ஜில்லுன்னு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்த பூமிகா பலராலும் பாராட்டப் பட்டார்.
திறமையான மற்றும் அழகான நடிகை தான் என்றாலும் இவருக்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை.அதனால் சினிமாவை விட்டு விலகி திருமணத்தில் இணைந்தார். தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட பூமிகா மீண்டும் சினிமாவிற்குள் நுழைந்துள்ளார்.
குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள பூமிகா சினிமாவை விட்டு ஏன் போனீர்கள் என்ற கேள்விக்கு..எனக்கும் சினிமாவில் நடிக்க தான் ஆசை. ஆனால் எனது உதட்டை பலர் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள்.
திறமையை பார்க்காமல் உதடு பெரிதாக இருக்கிறது இந்த திரைப்படத்திற்கு சரி வர மாட்டாய் என கிண்டல் செய்தார்கள்.ஒரு கட்டத்தில் என் உதடுகள் மீது எனக்கே வெறுப்பாகி விட்டது. பெரியதென்பதால் வெட்டவா முடியும்? இந்த கிண்டல்கள் என்னை மனதளவில். பாதித்தது.அதனால் ஒதுங்கினேன் என குறிப்பிட்டுள்ளார்.!