இந்திய வரலாற்றில் மறக்க முடியாத இன்னுமொரு நாளாக மாறியுள்ளது தான் காஷ்மீர் தாக்குதல். 2500 பாதுகாப்பு படையினருடன் புறபட்ட இராணுவ பேருந்து பள்ளத்தாக்கு படைதளத்திற்கு வெறும் முப்பது கிலோமீட்டர் தூரமே உள்ள நிலையில் புலவாமா பகுதியில் தற்கொலை குண்டு தாக்குதலில் வெடித்து சிதறியது. அதி உயர் பாதுகாப்பு பகுதியான ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையில் நடந்த இந்த தாக்குதலில் இது வரை சுமார் 44 நான்கு படையினர் வீர மரணத்தை தழுவியதுடன் பலர் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்த நிலையில் தற்கொலை தாக்குதலை நடத்திய தீவிரவாதி..
ஆதிலின் பெற்றோர் மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்க தொடங்கியுள்ளனர். ஆதிலின் தந்தையின் பெயர் குலாம் ஹசான். தாய் பைமீதா. ஆதில் படிப்பில் விளையாட்டில் மிகவும் கெட்டிக் காரன். அதே நேரம் அதிக கோபக் காரன். 2016ம் ஆண்டு நடந்த ஒரு விடயம் அவனை மிகவும் பாதித்துள்ளது.
அதனால் தான் இந்த செயலை அவன் செய்துள்ளான் என கூறி தொடர்ந்து பேசியுள்ளார். 2016ம் ஆண்டு ஏதோ ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றின் மீது பள்ளி சென்று வரும் போது ஆதில் கல் எறிந்துள்ளான். அது நண்பர்கள் மற்றும் ஆதில் விளையாட்டாக எறிந்தது. இதனை கண்ட பாதுகாப்பு இராணுவ வீரர்கள் ஆதில் மற்றும் நண்பர்களை வன்முறையில் ஈடுபட்டதாக கூறி இரத்தம் வரும் வரை அடித்துள்ளனர்.
இவர் பேரணியின் மீது கல் எறிந்த வீடியோக்கள் இருந்ததால் சட்ட ரீதியாக எதுவும் எம்மால் செய்ய முடியவில்லை. அப்போதே நான் இராணுவத்தை பழி வாங்குவேன் என கூறினான். நாம் சமாதனம் செய்தோம். சில நாட்களில் தீவிர வாத இயக்கத்தில் அவன் சேர்ந்துவிட்டதாக சிலர் கூறினார்கள் நாம் அவனிடம் கேட்ட போது இல்லை என்றே பதில் வந்தது.
இந்த நிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் ஆதில் காணாமல் போய் விட்டான். மூன்று மாதம் வரை தேடினோம். பொலீஸில் முறைபாடு செய்தோம் எந்த பலனும் கிடைக்கவில்லை. சிலர் ஜெயிஸ் இ முகமது இயக்கத்தில் இருப்பதாக கூறினார்கள் . எமக்கு வேறு வழி இன்றி அவனை தேடுவதை விட்டுவிட்டோம்.
செய்திகளில் அவன் புகைப்படமும் பேரும் வந்த போது பதறி போய்விட்டோம். இரணுவ வீரர்களின் குடும்பத்தில் போல் எங்கள் வீட்டிலும் அனைவரும் சோகத்தில் உள்ளோம். அன்று நடந்த சிறிய வன்முறை இன்று இத்தனை பெரியதாகி உள்ளது. இப்படி தான் தீவிர வாதிகள் உருவாகின்றனர். இதனை அன்றே தீர்த்திருந்தால் என் மகன் இன்று இல்லாமல் போய் இருக்க மாட்டான் என குறிபிட்டுள்ளார்.!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”