அட இந்த நிறுவனத்தையும் அமேசான் வாங்கிவிட்டதா?
தற்போது அமேசான் நிறுவனமானது பல கம்பெனிகளை தன்னகப் படுத்திக் கொண்டிருக்கின்றது. இதற்குக் காரணம் தொழிலில் நிலவுகின்ற போட்டி நிலைமைகளே ஆகும். அந்தவகையில் அமேசான் நிறுவனமானது தற்போது “மோர்” என்கின்ற நிறுவனத்தையும் வாங்கியுள்ளது.
இந்த மோர் நிறுவனத்தைப் பற்றி அறிவீர்களா? இது சாதாரண கடையாக இருந்து சூப்பர் மார்க்கெட்டாக மாறிய பெரும் வர்த்தக நிறுவனம் ஆகும். “மோர்” நிறுவனத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.4200 கோடி என்பது அனைவருக்கும் ஆச்சரியமான விடயம் ஆகும். அந்த 4200 கோடி மதிப்புள்ள மோர் நிறுவனத்தையே அமேசான் நிறுவனமானது தற்போது தன்வசப்படுத்தியுள்ளது.
இந்த மோர் நிறுவனமானது ஆதித்யா பிர்லா குழுமத்தின் சூப்பர் மார்கெட் நிறுவனம் ஆகும். இதை அமேசான் மற்றும் சமரா கேபிட்டல் நிறுவனங்கள் கையகப்படுத்தி இருக்கின்றன. ஆதித்யா பிர்லா குழுமமே ” மோர் ” சூப்பர் மார்கெட் கடைகளை நடத்தி வருகிறது. நாட்டிலேயே இது நான்காவது மிகப்பெரிய சங்கிலித் தொடர் சூப்பர் மார்கெட் நிறுவனமாக கருதப்படுகிறது.
அந்த நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை சமரா கேபிட்டல் நிறுவனமும், 49 சதவீத பங்குகளை அமேசான் நிறுவனமும் 4 ஆயிரத்து 200 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தி உள்ளன. இந்தியாவில் 35 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அறிவித்திருந்த நிலையில், இதுவரை 25 ஆயிரத்து 220 கோடி ரூபாயை அமேசான் முதலீடு செய்துள்ளது.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”