“அகம்பாவம் பிடித்த ப்ரோமோ பைத்தியம் இந்தப் பெண்” நல்லவர் என்றால் ஷிவானி தான்.!சுரேஷ் தாத்தா அதிரடி.!!
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுரேஸ் சக்ரவர்த்தி வீட்டில் உள்ளவர்கள் பற்றி பேட்டி கொடுத்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பேசியுள்ள சுரேஷ் சக்ரவர்த்தி நீங்கள் தொலைகாட்சியில் பார்ப்பது எல்லாம் சரி என்று நினைக்காதீர்கள். ஒரு மணி நேரத்திற்குள் 24 மணி நேரம் நாம் செய்வதை காட்டிவிட முடியாது. என்னை பொறுத்த வரை பிக் பாஸ் வீட்டிற்குள் சிவானியை தவிர நல்லவர்கள் யாரும் இல்லை.
எல்லோருமே சுய நலத்தோடு விளையாடுகின்றனர். பாலா உண்மையாக இருந்தால் கூட தன்னால் எல்லாம் முடியும் என்று நினைப்பவர். தான் பெரியவர் என்ற எண்ணம் உண்டு. ஆரி பற்றி கேட்கவே வேண்டாம், அவர் சொல்வது மட்டும் தான் சரி என்று நினைப்பவர். சனம் ஷெட்டி தனது தவறை தவிர மற்றையவர்களின் தவறை நன்றாக தேடுவார். அவரது தவறை யாரும் கூற கூடாது.
அர்ச்சனா தான் அந்த வீட்டின் பெண் பிக் பாஸ். நிஷா எடுப்பார் கை பிள்ளை. ரியோ காரியகாரர். சோம் மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆமாம் சாமி. கேப்ரியலா ஆரம்பத்தில் நல்லவர் என்று நினைத்தேன் ஆனால் அவ்வளவு நல்லவர் இல்லை. ஆஜித் இப்போது முன்னேற ஆரம்பித்துள்ளார்.
சம்யுக்தா புரியாத புதிர். ரம்யா பாண்டியன் சிறந்த புத்திசாலியான போட்டியாளர். இதில் மிக மோசமானவர் என்றால் அனிதா சம்பத் தான். அகம்பாவம் பிடித்தவர். ஆணவத்தில் எப்போதும் அடுத்தவர்களை அடக்க நினைப்பார். ப்ரோமோவில் வர வேண்டும் என்பதற்காக இல்லாதை ஒன்றை இருப்பது போல் காட்டுவார்.
விஷம் நிறைந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டில் யார் வெற்றிபெற வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு அழகி தான். நான் அழகி என்று கூப்பிடும் அப்பாவி பெண் ஷிவானி வெற்றி பெற்றால் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.!