6 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து சில நாட்களில் மனைவிக்கு இளைஞன் செய்த கொடூரம்.! அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்.!
திருமணமாகி இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் இளம் மனைவியை துடிக்க துடிக்க கழுத்தறுத்து கொலை செய்த இளைஞன் தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மத்திய பிரதேச மாநில த்தை சேர்ந்தவர் ஹர்ஷ் சர்மா. 24 வயதான இவர் அனுஷ் என்ற 22 வயது இளம்பெண்ணை 6 வருடங்களாக காதலித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தார்.
திருமணம் செய்த சில நாட்களிலேயே இருவருக்கும் சண்டை ஆரம்பித்தது. 6 வருட காதலில் இருவருக்குமிடையில் இருந்த அன்பு இல்லாமல் போய்விட்டதாக அனுஷ் கணவருடன் சண்டையிட்டுள்ளார். அத்துடன் சர்மாவிற்கு போதை பழக்கம் இருப்பது அப்போது தான் அனுஷுக்கு தெரியவந்துள்ளது.
இதனால் இருவருக்கும் தினமும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் நேற்றைக்கு தினம் உச்சக்கட்ட கோபத்திற்கு சென்ற சர்மா அனுஷின் கழுத்தை இரும்பு சங்கிலியால் நெரித்துள்ளார். ஆனால் அனுஷ் துடிதுடித்தாரே தவிர மரணமடையவில்லை, இதனால் சமையல் அறை சென்ற சர்மா கத்தியை எடுத்து வந்து அனுஷின் கழுத்தை அறுத்துள்ளார்.
பின்னர் சிறிது நேரம் அவர் துடிதுடித்து இறப்பதை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு நேரடியாக போலீஸ் நிலையம் சென்றுள்ளார். பின் போதையில் மனைவியை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். வழக்கு பதிவு செய்த பொலீஸார் சர்மாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.!