பிக் பாஸ் வீட்டிற்குள் அராஜகம் செய்துகொண்டிருப்பவர் நடிகை வனிதா விஜயகுமார். தமிழ் சினிமாவில் இளைய தளபதி விஜய் அவர்களுடன் ஜோடியாக அறிமுகமானார்.அதன் பின் ஒரு சில திரைப்படங்கள் நடித்த நிலையில் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமண பந்தத்தில் இணைந்தார். ஏராளமான வரதட்சணை கொடுத்து மகளின் திருமணத்தை ஆகாஷ் என்பவருடன் நடத்தி முடித்தார் விஜயகுமார். ஆனால் வனிதா சில ஆண்டுகளில் ஆகாஷை விவாகரத்து செய்துவிட்டு ஆனந்த ராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இதனால் விஜயகுமார் வீட்டில் வெடிக்க ஆரம்பித்தது பிரச்சனைகள். தமிழ் சினிமாவில் விஜயகுமார் சிறந்த நடிகர் அதே போல் தான் மஞ்சுளாவும் சிறந்த நடிகை.
இந்த நட்சத்திரங்களின் பிள்ளைகளும் சினிமாவில் கால் வைத்ததால் நட்சத்திர குடும்பமானது. வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி, எல்லோருமே சினிமாவின் நாயகிகள் தான். அதே போல் தான் அருண் குமாரும். ஆனால் அருண் குமாரின் சினிமா பயணம் அத்தனை இலகுவானது அல்ல. ஆரம்பத்தில் அருண் நடித்த எந்த திரைப்படங்களும் வெற்றிபெறவில்லை. திரைப்படம் ஓரளவு ஓடினால் கூட அருணுக்கு அதனால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் வனிதா விஜயகுமார் அருண் மீத்ய் ஏகப்பட்ட புகார் கொடுத்தார். தந்தையை அடிமையாக வைத்திருப்பதாக குற்றம் சுமத்தினார் இதனால் அருண் பலமுறை குடித்து சர்ச்சையில் சிக்கினார். இருப்பினும் முயற்ச்சியை விடவில்லை. தல அஜித்திற்கு வில்லனாக என்னை அறிந்தால் திரையில் நடித்தார். இந்த திரைப்படம் அருணின் வாழ்க்கையை மாற்றியது. அதன் பிக் அவர் நடித்த செக்க சிவந்த வானம், தடம் போன்றவை ஹிட் ஆக இப்போது தொடர்ந்து நடித்துக் கொண்டிருகின்றார்.
வனிதா விஜயகுமார் விஷம் போன்றவர். தன்னுடைய தம்பி தங்கைகளின் வாழ்க்கையை கூட குழி தோண்டி புகைக்க நினைத்தவர் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பிக் பாஸ் வீட்டில் வனிதா இருப்பது தொடர்பாக அருண் கூறியுள்ளார். அருண் தொடர்பான வீடியோ இதோ..!!