இந்தியாவில் இளம் பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை..!!!
இந்தியாவில் மும்பையை சேர்ந்த பயல் தட்வி என்ற இளம் பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் மருத்துவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் எழுதி வைத்திருந்த கடிதம் புகைப்படமாக அவர் செல்போனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மருத்துவர் கடந்த மே மாதம் 22ஆம் திகதி தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவளோட இருந்த சக பெண் மருத்துவர்கள் சாதி ரீதியாக பேசி பயலை துன்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்ததாக கொண்டதாகவும் தகவல் வெளியானது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஹேமா அஹுஜா, அன்கிதா, மேரே ஆகிய மூன்று மருத்துவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் பயல் உயிரிழப்பதற்கு முன்னர் கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும் அது முக்கிய ஆதாரம் என்பதால் குற்றவாளிகள் அதை அழிக்க முயன்றதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த சூழலில் பயல் எழுதிய கடிதத்தின் மூலம் ஸ்கீரின் ஷாட் புகைப்படத்தை அவர் செல்போனில் இருந்து தடயவியல் நிபுணர்கள் கைப்பற்றியுள்ளதாக பயலின் வழக்கறிஞர் குணரத்னா தெரிவித்தார்.
மேலும் அந்த கடிதத்தில், மூன்று பெண் மருத்துவர்களின் பெயர்களும், அவர்கள் தன்னை எப்படியெல்லாம் சாதி ரீதியாக மோசமாக பேசி துன்புறுத்தினார்கள் என்றும் விளக்கமாக எழுதியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
குணரத்னா தெரிவித்தது யாதேனும் கடிதம் தொடர்பாக அறிந்துள்ள மூன்று மருத்துவர்கள் அதை அழிக்க முயன்றனர். தற்போது அதை தடயவியல் நிபுணர்கள் கைப்பற்றியுள்ளனர். குற்றவாளிகளான மூன்று பேருக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க போராடுவேன் என கூறியுள்ளார்.