ஐஸ்கிரீமை நக்கி சாப்பிட்ட பெண்ணுக்கு தண்டனை 20 வருட சிறை.! எப்படி சாப்பிட்டார் தெரியுமா அட இத பாருங்கள்..!!
ஐஸ்கிரீம் சாப்பிட்ட பெண்ணை பொலீஸார் தேடி பரும் சம்பவம் வைரலாகி வருகிறது. அமெரிக்கா டெக்ஸாஸ் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட பெண்ணுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அது என்னப்பா ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு எல்லாம் கைது செய்வார்களா.?என நீங்கள் கேட்பது புரிகிறது, ஆனால் தனது சொந்த காசை போட்டு வாங்கி சாப்பிட்டு இருந்தால் யார் என்ன தான் சொல்லப் போகிறார்கள்.. டெக்ஸாஸ் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு தனது ஆண் நண்பருடன் ஷாபிங் செல்கிறார். அங்கு ஐஸ்கிரீம் ஒன்றை எடுத்து திறந்து நக்கிவிட்டு மீண்டும் வைத்துவிட்டு செல்கிறார். இதனை அவரது ஆண் நண்பர் வீடியோ எடுத்து வெளியிட அது வைரலாகி விட
வீடியோவை பார்த்த சூப்பர் மார்க்கெட் மற்றும் ஐஸ்கிரீம் நிறுவனம் குறித்த பெண் மீது புகார் கொடுத்துள்ளது. அமெரிக்காவில் உணவை வீணாக்குவது, உணவை அவமதிப்பது போன்றவை மிகப் பெரிய குற்றங்களில் அடங்கும். குறித்த பெண் ஐஸ்கிரீமை நக்கிவிட்டு வைத்துச் சென்றதும் உணவை அவமானப் படுத்தியதற்கு ஈடாகிறது.
அதனால் குறித்த பெண் கைது செய்யப் படும் பட்சத்தில் 20 ஆண்டுகள் சிறை தாண்டனை அனுபவிக்க நேரிடும். அத்துடன் சூப்பர் மார்க்கெட் மற்றும் ஐஸ்கிரீம் நிறுவனம் கேட்கும் பணத்தையும் கட்ட நேரிடும். 20 வருட சிறை வாழ்க்கை ஏராளமான டாலர்கள் நஷ்ட ஈடு வெறும் ஐஸ்கிரீமை நக்கியதற்கு தண்டனை. இந்த நிலையில் குறித்த சூப்பர் மார்க்கெடில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அவரது ஆண் நண்பர் மற்றும் அவரை பொலீஸார் தேடிவருகின்றனர்..!!
What kinda psychopathic behavior is this?! pic.twitter.com/T8AIdGpmuS
— Optimus Primal (@BlindDensetsu) June 29, 2019