பயங்கரவாதி சஹ்ரான் பற்றி வெளிவரும் திடுக்கிடும் தகவல்..!!
கடந்த 10 வருடங்களில் மட்டும் சிங்கள மற்றும் தமிழ் பெண்கள் 90 ஆயிரம் பேர் திருமணத்தின் மூலம் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில் எதிர்வரும் புதிய அரசாங்கத்தின் கீழ் இந்த 90 ஆயிரம் பேர் தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்தி, விரும்பியவர்களுக்கு தான் ஏற்கனவே இருந்த சமயத்துக்கு செல்வதற்கு வழியமைத்துக் கொடுப்போம்.
பாடசாலை வயதிலுள்ள பெண் பிள்ளைகளை திருமணம் செய்ய முடியாது என்ற சட்டம் நாட்டில் நடைமுறையில் இருந்தும், முதுகெலும்பு இல்லாத அரசாங்கத்துக்கு பயங்கரவாதி சஹ்ரான் பாடசாலை செல்லும் 8ஆம் ஆண்டு பிள்ளையை திருமணம் செய்த போது தடுக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கத்தில் பாடசாலை செல்லும் பிள்ளைகளை திருமணம் செய்ய தடை விதித்து கடுமையான சட்டம் ஒன்றை கொண்டுவரப் போவதாகவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.