கை கால்களை கட்டி கொடூரமான முறையில் கொல்லப் பட்ட இளைஞன்..! பொலீஸார் மீது குற்றம் சுமத்தும் இளம் மனைவி..!!
தனது கணவரின் கொலைக்கு காவல் துறையினரும் காரணம் என திருமணமாகி சில மாதங்களிலேயே கணவனை இழந்த பட்டதாரி பெண் குற்றம் சுமத்தியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானாவை சேர்ந்தவர் ஹேமந்குமார். இவர் அவந்தி ரெட்டி என்ற பெண்ணை 4 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த கடந்த ஜூன் 11ம் திகதி பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார்.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்களின் திருமணத்தை அவந்தி ரெட்டியின் குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் ஹேமந்த் குமாரின் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டனர். திருமணமாகி 3 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஹேமந்த் குமார் மற்றும் அவந்தி இருவரையும் சமாதானம் பேசுவதற்காக அவந்தி ரெட்டி குடும்பத்தினர் அழைத்துள்ளனர்.
பெற்றோரை நம்பி அவர்கள் அனுப்பிய காரில் அவந்தி மற்றும் ஹேமந்த் சென்றுள்ளனர். பாதிவழியில் சென்றபோது கார் கதவை திறந்த அவந்தி ரெட்டியின் மாமா யுகாந்தர் ரெட்டி அவந்தியை காரில் இருந்து வெளியே இழுத்து விட்டு ஹேமந்த் குமாரை அடித்து உதைத்துள்ளனர். கதறிய அவந்தி உடனடியாக பொலீஸாருக்கு தகவல் கொடுத்ததுடன் உறவினர்கள், நண்பர்களுக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்துள்ளார்.
சில நிமிடங்கள் அவந்தியையும் கணவரையும் ஒன்றாக வைத்து துன்புறுத்திய அவந்தியின் மாமா மற்றும் உறவினர்கள் அவந்தியை அப்படியே விட்டுவிட்டு ஹேமந்தை கடத்தி சென்றுள்ளனர். நீண்ட நேரத்திற்கு பின்பு சம்பவ இடத்திற்கு வந்த நண்பர்கள் அவந்தியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பல மணி நேரத்தின் பின் பொலீஸார் வந்துள்ளனர்.
இருப்பினும் ஹேமந்தை கண்டு பிடிக்க முடியவில்லை. நேற்று காணாமல் போன ஹேமந்த் இன்றைய தினமே சடலமாக மீட்கப் பட்டுள்ளார். கை மற்றும் கால்கள் கட்டப் பட்ட நிலையில் உடல் முழுவதும் காயங்களுடன் மீட்கப் பட்ட ஹேமந்தின் சடலம் தற்போது வைத்திய பரிசோதனைக்காக வைக்கப் பட்டுள்ளது. தனது கணவரின் கொலை பற்றி கூறியுள்ள அவந்தி குடும்பத்தினருடன் பொலீஸாருக்கும் இந்த கொலையில் பங்கு உண்டு..பல மணி நேரத்தின் பின் தான் சம்பவ இடத்திற்கு வந்தனர் என தெரிவித்துள்ளார்..!!