பிக் பாஸ் வீட்டிற்குள் ஏமாற்றப் படும் பாலாஜி.! வெளியேற்ற முடிவு எடுத்து விட்டாரா பிக் பாஸ் .?
பிக் பாஸ் வீட்டில் ஒரு சிலரால் வெறுக்கப் பட்டாலும் ரசிகர்களின் வாக்குகளின் அடிப்படையில் முதலிடத்தில் இருப்பவர் பாலாஜி முருகதாஸ். வசதியான அழகான குடும்பத்தில் பிறந்து இருந்தால் கூட தாய் தந்தையரின் தவறான செயலால் அன்பு கிடைக்காமல் வளர்ந்த பாலாஜி சொந்த உழைப்பில் முன்னேறியவர். அடுத்தவரிடம் 5 ரூபாய் கூட வாங்கவில்லை தன் வளர்ச்சிக்கு என்ற கர்வமோ என்னவோ அவரை சற்று திமிர் பிடித்தவராகவே ரசிகர்களுக்கு காட்டுகிறது.
எதையும் வெளிப்படையாக பேசும் பாலாஜி தனது உரலை உயர்த்தி பேசுவதால் போட்டியாளர்கள் பாலாஜியிடம் இருந்து விலகியே இருக்கின்றனர். இந்த நிலையில் பாலாஜி மற்றும் அர்ச்சானாவிற்கு இடையே இருந்த சண்டை இன்று உருக்கமான காட்சியாக மாறியது. திட்டிக் கொண்டே இருந்த இருவரும் கட்டிப் பிடித்து கதறி அழுதனர். இதனால் பலருக்கு அர்ச்சனா மீது இருந்த கோபம் சட்டென குறைந்தது என்று தான் கூற வேண்டும்.
ஆனால் ஒரு சிலர் அர்ச்சனாவின் அன்பு முற்றிலும் பொய்யானது என கூறிவருகின்றனர். அர்ச்சனா ரியோ மற்றும் நிஷாவிடம் பாலாஜி பற்றி எந்த அளவிற்கு தவறாக பேசினார் என்பது எமக்கு தெரியும், நேற்றும் தேவையில்லாத ஒரு விடயத்திற்கு தான் அர்ச்சனா சண்டையை ஆரம்பித்தார். இப்படி இருக்கையில் எப்படி திடீரென அர்ச்சனாவால் மாற முடிந்தது,? இப்போது எப்படி மகன் என கூறுகிறார்.?
கண்டிப்பாக பாலாஜியை அம்மா செண்டிமெண்ட் பயன்படுத்தி மட்டுமே அடக்க முடியும், பாலாஜி அடங்கினால் சீக்கிரமே வெளியேற்ற முடியும் என்பது அர்ச்சனா குரூப்பின் திட்டம். இதில் இலகுவாக பாலாஜி மாட்டிக் கொண்டுள்ளார். ஆனால் அர்ச்சனா & டீமுடன் பிக் பாஸும் ஏமாற்றுகிறார் என்றே தோன்றுகிறது.!