முகெனை தவிர்த்து நாமினேஷனில் வந்த போட்டியாளர்கள்..! லொஸ்லியா கவினுக்கு பிக் பாஸ் வழங்கிய ஆதரவு..!!
பிக் பாஸ் வீட்டில் இன்று இடம்பெற்ற நாமினேஷனை பிக் பாஸ் குரல் காமெடி ஆக்கியது. கடந்த இரண்டு சீசன்களிலும் பிக் பாஸ் குரலுக்கு போட்டியாளர்கள் பயந்து நடுங்கினார்கள், ஆனால் இந்த சீசனில் பிக் பாஸ் குரலுக்கு குருநாதா என சாண்டி பெயர் வைக்க அதை சொல்லியே அனைவரும் அழைத்தனர்.
அதன் பின் பிக் பாஸ் குரலும் போட்டியாளர்களின் விருப்பத்திற்கு இடமளித்தது. குறிப்பாக முகெனை ஐயா என்றழைத்தது, செரினை அழகாக இருக்கிறீங்க என்றது உட்பட போட்டியார்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமே கொடுத்தது பிக் பாஸ் குரல். இனி எதுவுமே கடினமான போட்டி இருக்கப் போவதில்லை அதனால் இன்று அனைத்து போட்டியாளர்களையும் பச்சை மிளகாய் சாப்பிட வைத்தது பிக் பாஸ் குரல்.
இதில் முகென் மூன்று பச்சை மிளகாய் சாப்பிட, தர்சன் 2சாப்பிட்டார், அதே போல் செரின் மற்றும் சாண்டியும்
இரண்டு பச்சை மிளகாய் சாப்பிட்டனர். இதில் லொஸ்லியா மற்றும் கவினை ஒரு பச்சை மிளகாயை மட்டுமே சாப்பிட வைத்தார் பிக் பாஸ். அது மட்டும் இன்று லொஸ்லியாவை கையை ஆட்டாதீர்கள், சீரியஸாக இருங்கள் என கிண்டல் செய்தது பிக் பாஸ் குரல்.
இதில் மற்ற அனைவரும் அமைதியாக இருக்க தர்சன் மட்டுமே ஓடி கத்திக் கொண்டிருந்தார். இப்படி இருக்க யார் நாமினேஷனில் வரப் போகிறார், யார் பாதுகாக்கப் பட போகிறார் என நினைத்துக் கொண்டிருந்த போட்டியாளர்களுக்கு அனைவருமே நாமினேஷனில் வந்து விட்டீர்கள் என ஷாக் கொடுக்கப் பட்டது.
ஜாலிக்காக உங்களை பச்சை மிளகாய் சாப்பிட சொன்னேன் என்றதும் போட்டியாளர்கள் செல்லமாய் கோபப் பட்டனர். எது எப்படி இருந்தாலும் இன்று லொஸ்லியா கவின் மட்டுமே ஒரு மிளகாயுடன் தப்பினார்கள். !! இம்முறை நாமினேஷனில் அனைவரும் வந்துள்ளனர்..!