பிக் பாஸ் வீட்டில் நடந்த அனைத்தையும் எடிட் செய்து விட்டார்கள்.!! தொகுப்பாளினி அர்ச்சனா குற்றச் சாட்டு.!!
நடந்த அனைத்தையும் எடிட் செய்து விட்டார்கள், அன்பில் இணைந்தவற்றை இவர்கள் காட்டவே இல்லை என தொகுப்பாளினி அர்ச்சனா பேட்டியளித்துள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் வெளியே வந்துள்ள அளவிற்கு பிரச்சனை வரவில்லை என்றும் இதில் அதிகமாக எடிட் உள்ளதாக தெரிவித்துள்ளார். போட்டியாளர்கள் அனைவரும் வீட்டில் அன்பாகவும் ஒற்றுமையாகவுமே இருந்து இருக்கிறோம்,
சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தால் கூட, முரண்பாடுகள் இருந்தால் கூட பேசியோ திட்டியோ முடிந்துவிட்டு அன்பாகவே இருந்தோம். ஆனால் வெளியே வந்து பார்த்த பின் தான் தெரிந்தது எவ்வளவு எடிட் செய்துள்ளார்கள் என்று. வீட்டில் கெட்டது செய்பவர்களை நல்லவராகவும், நல்லது செய்பவர்களை கெட்டவராக காட்டுகின்றனர்.
அத்துடன் நாங்கள் குரூப் செய்துகொண்டதாக ரசிகர்கள் நினைத்துக் கொண்டனர். ஆனால் நாங்கள் வீட்டில் உள்ள அனைவருடன் அன்பாகவே இருந்தோம். பாலா, ரம்யா, ஷிவானி பற்றி தவறாக பேசுகின்றனர், ஆனால் அவர்கள் வீட்டில் சிறந்த போட்டியாளர்கள்.
சிலர் நரி தோல் போர்த்திக் கொண்டு பசுவாக பிக் பாஸ் வீட்டில் இருகின்றனர். அவர்களை நல்லவராக தொலைகாட்சியில் காட்டுகின்றனர். உண்மை எப்போதும் மறைக்க முடியாது, பொருத்திருந்து பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.!