சேர்ந்து வாழ விரும்பிய மனைவி ஐஸ்வர்யாவை வெறுத்து ஒதுக்கிய நடிகர் தனுஷ்.! கவலையில் தனுஷின் தந்தை.,!!
சேர்ந்து வாழ விரும்பிய ஐஸ்வர்யாவை வேண்டாம் என கூறி தனுஷ் விலகியதாக தனுஷின் நெருங்கிய உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக தெரிவித்தனர்.
18 வருட திருமண வாழ்க்கையை அசால்ட்டாக
தூக்கி வீசிவிட்டார்களே என பலரும் கூறி வந்த நிலையில் ஐஸ்வர்யாவுடன் குடும்பத்தினர் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ரஜினியின் கோபம் மற்றும் தனுஷின் தந்தையின் அறிவுரையால் தனுஷுடன் சேர்ந்து வாழ ஐஸ்வர்யா முடிவு செய்து அதனை தனது மாமனார் கஸ்தூரி ராஜாவிடம் தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்ற கஸ்தூரி ராஜா தனுஷ் மற்றும் குழந்தைகளுடன் திருப்பதி சென்று வாருங்கள் மீடியாக்கள் கண்ணில் நீங்கள் பட்டாளே போதும் என தெரிவித்ததுடன் ஷூட்டிங்கில் இருந்த தனுஷுக்கு அழைப்பை ஏற்படுத்தி கூறியுள்ளார். இதனால் கடுப்பான தனுஷ் என்னால் இனி ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ முடியாது.
பிடிக்கவில்லை என்றே பிரிந்தேன், மறுபடி சேர்த்து வைக்க முயற்சி செய்ய வேண்டாம். என் அனுமதி இல்லாமல் இனி ஒருமுறை இப்படி செய்ய வேண்டாம் என தந்தையுடன் தனுஷ் கோபித்துள்ளார். இதனால் கஸ்தூரி ராஜா என்ன செய்வதென்று தெரியாமல் கவலையில் உள்ளாராம். ஐஸ்வர்யா இவ்வளவு விட்டுக் கொடுத்தும் பிடிவாதமாக இருக்கும் தனுஷுக்கு குடும்பத்தினர் அறிவுரை கூறி வருகின்றனர்.!/