யாஷிகாவை நிரூப் திருமணம் செய்துகொள்வாரா? யாஷிகாவே கூறியுள்ள பதில் இதோ.!!
நடிகை யாஷிகா யாரை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என ரசிகர்கள் மத்தியில் இருந்த கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நிரூப் முதல் முதலில் அபிராமியை காதலித்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.
பின்னர் யாஷிகாவுடன் காதலில் இருந்தார். இருவரும். அத்துமீறி கொடுத்த முத்த காட்சிகள் கூட வெளியானது. ஆனால் அது சில நாட்களில் மறந்து போனதுடன் காதலும் உடைந்து போனது. இருவரும் பிரிந்த பின்னர் தங்கள் வேலைகளில் பிஸியாக இருந்தனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டுக்கு வந்த யாஷிகா நிரூப்பிடம் பேசிய போது நிரூப் யாஷிகா மீது இன்னும் காதலுடன் இருப்பது தெரிந்தது. இந்த நிலையில் யாஷிகாவும் நிரூப்பும் திருமணம் செய்துகொள்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து கேட்டனர். ஆனால் யாஷிகா நிரூபுக்கும் எனக்கும் காதல் இல்லை, நண்பர்கள் தான் என கூறிவிட்டார். இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.!