ஶ்ரீ லங்கா அரசு புலிகளை பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தும் முயற்சிகளில் இறங்க வேண்டும் – நாகல ஹொடஹேவா
புலம்பெயர் சிங்கள அமைப்புக்களின் தலைவர் கலாநிதி நாகல ஹொடஹேவா ஐ.நா வின் மனித உரிமை ஆணைக்குழுவின் அமர்வுவுகள் நடைபெறும் நிலையில் அதற்கு சமாந்தரமாக ஜெனிவாவில் நடைபெறுகின்ற அரச சார்பற்ற அமைப்புக்களின் அமர்விலே கலந்து உரையாற்றியிருந்தார். அங்கு
மனித உரிமை ஆணையகத்தால் முன்வைக்கப்படும் இலங்கை தொடர்பபான முன்மொழிவுகளில் அரசாங்கம் சாராத ஆயுதக் குழுவாகவே விடுதலைப் புலிகள் குறிப்பிடப்பட்டுள்ளனர். அதில் பயங்கரவாதிகளாக அவர்கள் குறிப்பிடப்படவில்லை.
இதனால் புலிகளுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இலங்கை அரசு விரைந்து செயற்பட்டு புலிகளை பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தும் முயற்சிகளில் இறங்கவேண்டும். என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.