யாழ்ப்பாணத்தில் கார்ப் பந்தயம் நடாத்தக் காத்திருக்கும் படைத் தரப்பு – யாழ் கட்டளைத் தளபதி
நேற்றையதினம் யாழ்ப்பாணம் பலாலியில் யாழ் மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி தர்ஷன கெட்டியாராச்சி ஊடகவியலாளர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்குப் பதில்களை வழங்கியிருந்தார்.
s
அதன்போது மக்களுக்காக இலங்கை இராணுவத்தினர் செய்கின்ற சேவைகளை ஊடகங்கள் சரியான முறையில் வெளிப்படுத்துவதில்லை என்று குறைபட்டுக் கொண்டதோடு தாம் செய்யும் சேவைகள் யாரையும் ஏமாற்றும் நோக்கம் கொண்டதோ அல்லது அரசியல் நோக்கம் கொண்டதோ அல்ல என்றும் கூறியுள்ளார்.
பாதுகாப்புப் படையினர் ஊடாக மக்களுக்கு 10 ஆயிரம் மலசலகூடங்கள் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்தோடு படையினர் 10 ஆயிரம் கண்களைத் தானமும் செய்துள்ளனர். தெற்கில் உள்ள தொண்டு நிறுவனங்களோடு இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை இராணுவம் வடக்கில் செய்து வருகின்றது. என்று குறிப்பிட்ட அவர்,
யாழ் மாவட்டத்திலே கார் பந்தயம் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயம் ஆகியவற்றையும் முன்னெடுப்பதற்கும் இராணுவம் தீர்மனித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”