புரட்சி வானொலியின் இன்றைய ஆன்மீக தகவல்களுக்காக காத்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்..வாழ்க வளமுடன்..! இன்றைய அன்மீக தகவலில் நாம் பார்க்கப் போவது எம் வீட்டு பூஜை அறையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய இரண்டு பொருட்கள் தான். பெரும்பாலான வீட்டு பூஜை அறைகளில் பூஜை பொருட்களாக பால், தேன் , தொடங்கி என்ன என்ன வகைகள் இருக்கிறதோ அத்தனையும் வைத்து பூஜை செய்வார்கள். சிலர் வீட்டில் தங்களுக்கு உணவு செய்ய அரிசி இல்லாவிட்டாலும் இறைவனுக்கு படைக்க வேண்டும் என சக்கரைப் பொங்கல், வெண் பொங்கல், இப்படி வித விதமாக செய்வார்கள்.
ஆனால் இவற்றை இறைவன் விரும்புகிறானா…இவற்றை வைத்து படைத்தால் மட்டுமா இறைவன் ஏற்றுக் கொள்வான்? இறைவனுக்கு என்ன பிடிக்கும்..!? இறைவனுக்கு மிகவும் பிடித்ததும் எமது பூஜையை ஏற்றுக் கொள்ள இறைவனுக்கு தேவையானது பூ மற்றும் நீர் தான்.. அட ஆமாங்க
அன்றைய காலத்தில் புஷ்பம் மற்றும் ஜலம் கொண்டே பூஜை செய்தனர். புஷ்பம் பூ…எனவும் ஜலத்தை ஜ என்றும் சுருக்கி பூஜ ஆகி பூஜா ஆகி இப்போது பூஜையில் நிக்கிறது. சிவனை வழிபட மலர்கள் கூட தேவை இல்லை வெறும் வில்வம் இலை போதுமானது. வசதி இருப்பவர்கள் தங்கள் மனம் நிறைந்து படைகின்றனர். நாம் எம்மிடம் இருப்பதை கொண்டு இறைவனை மகிழ்ச்சிப் படித்துவோம்.
எப்போதும் உங்கள் பூஜையில் நீரும் பூவும் இருக்கட்டும். அடுத்த வாரம் எந்த கடவுளுக்கு எந்த மலரை கொண்டு பூஜிக்க வேண்டும் என்று பார்க்கலாம். இறைவனுக்கு பிடித்த நீர் மற்றும் மலர் இல்லாத பூஜை அறை என்றுமே புனிதம் இல்லை என்பதை உணர்ந்து செயற்படுங்கள்..! வாழ்க வளமுடன்..!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”