பயனர்களின் தகவல்களை வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்கிய பேஸ்புக்! திடுக்கிடும் உண்மை.
நாங்கள் அனைவரும் சாப்பிடாமல் கூட இருந்துவிடுவோம் ஆனால் இந்த பேஸ்புக் இல்லாமால் ஒரு அணுவும் அசையாது என்கின்ற அளவுக்கு பேஸ்புக்கில் நாம் மூழ்கிப் போயுள்ளோம். ஆனால் இந்த பேஸ்புக் நிறுவனமானது என்ன செய்திருக்கின்றது தெரியுமா?
நைக், ஸ்பிடிஸ் மற்றும் டெலிவரி நிறுவனம் யுபிஎஸ் சிறப்பு அணுகல் உள்ளிட்ட 61 வர்த்தக நிறுவனங்களுக்கு நம்மைப் போன்ற பயனர்களின் தகவல்களை பேஸ்புக் நிருவமானமாது வெளியிட்டுள்ளது.
சமூக ஊடக நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியான மார்க் ஜுக்கர்பெர்க் காங்கிரசின் விசாரணையின் போது பயனர்களின் தரவுகளை வர்த்தக நடவடிக்கைகளுக்கு வழங்கியதை ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் ‘நாங்கள் எங்கள் பொறுப்புக்களை பற்றிய பரந்த பார்வையையைக் கொண்டிருக்கவில்லை. அது எங்களுடைய பெருந்தவறு. அதற்காக வருந்துகின்றோம். இந்த பேஸ்புக் சமூக நிறுவனத்தை ஆரம்பித்து கொண்டுநடத்துவது நானே ஆகவே இந்த தவறுக்கான அனைத்துப் பொறுப்பும் என்னுடையதே” என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பாராளுமன்றத்துக்கு மார்க் ஜுக்கர்பெர்க் சமூகமளித்து , கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும் வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையாகக் கூறியதை அடுத்து அவர் அங்கு சென்ற வேலை இடம்பெற்ற கேள்விக்கணைகளினால் மார்க் ஜுக்கர்பெர்க் ஒருகணம் செய்வதறியாது திகைத்து பின் தன் தவறுகளை ஒப்புக் கொண்டுள்ளார்.
சுமார் 82 மில்லியன் பயனர்களின் தரவுகள் வர்த்தக நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் நாங்களும் ஒருவராக இருக்கலாம். என்னய்யா மார்க் இப்பிடி பண்ணிடிங்களே எசமான்?!!
உங்கள் பார்வைக்காக அசத்தலான வீடியோக்கள்!!