இறந்த பெண் உயிருடன் எழுந்த அதிசயம் !
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் கார் விபத்தொன்றில் இறந்துவிட்டார் என்று பிண அறைக்குள் வைக்கப்பட்டிருந்த வேளை உயிருடன் எழும்பிய சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் தென்மேற்குப் பகுதியிலுள்ள ஜொகானசபார்க் என்னும் இடத்திலேயே இந்த சம்பவமானது இடம்பெற்றுள்ளது.
‘நாங்கள் எங்கள் கடமையாகி சரிவரைச் செய்தோம் ஆனால் இது எவ்வாறு நடந்திருக்கும் என்று தெரியவில்லை” என்பதாக அந்த பெண்ணுக்கு சிகிச்சையளித்த ஜெரிட் பிரட்னிக் என்பவர் தெரிவித்துள்ளார்.
ஜூன் 24 ஆம் திகதி விபத்தில் அடிபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறந்துவிட்டார் என்று கருதிய அந்தப் பெண் பிண அறையில் வைக்கப் பட்டிருந்த வேளையிலே அவர் சுவாசிப்பதை அவதானித்த பிணவறைக்கு பொறுப்பானவர்கள் அவரை மீண்டும் சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவ்வாறு கொண்டு சென்ற அந்தப் பெண் தற்போது குணமடைந்து வருவதாகவும் உயிரைக் காப்பதுதான் எங்கள் பொறுப்பு என்றும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உங்கள் பார்வைக்காக அசத்தலான வீடியோக்கள்!!