ஸ்ரீலங்கா மட்டக்களப்பு தற்கொலைதாரியின் பின்னணியில் பள்ளிவாசல் மௌலவி!!
ஸ்ரீலங்காவில் கடந்த ஞாயிறன்று, இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு மிலேச்சத்தனமான தற்கொலைத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியாக கிழக்கிலங்கை மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த மௌலவி ஷக்ரான் ஹாசிம் செயற்பட்டுள்ளார் என இலங்கை பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
யார் இந்த ஷக்ரான் ஹாசிம்? கடந்த வரும் ஸ்ரீலங்காவில் சிங்கள முஸ்லிம் கலவரம் இடம் பெற்ற சம்பவத்தில் பள்ளி வாசல்கள் உடைக்கப்பட்ட போது கொதித்தெளுந்து இதற்கு பதிலடியாக பௌத்த விகாரைகளை உடைக்க வேண்டும், சிங்களவர்கள் அதிக உயிர் பலி கொடுக்க வேண்டும் என முழங்கிய ஒரு நபர். இவரது இந்த கோபாவேசம் கொண்ட காணொளி சமூக வலைத் தளங்களில் தற்போது உலாவிக் கொண்டிருக்கிறது.
இவர் இலங்கையில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட, ISIS பயங்கரவாதிகளிடம் நேரடியாகப் பயிற்சி பெற்றுக் கொண்டதோடு, சிரியா நாட்டிற்குச் சென்று, அங்கு போராளியாக அவ் அமைப்பிற்கு ஆதரவாக போரில் ஈடுபட்டவர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்றைய தினம் ஸ்ரீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அவர்களை சர்வதேச ஊடகவியலாளர்கள் சந்தித்த போது, ஹாசிம் பற்றிய அதிர வைக்கும் விடயங்களைப் பகிர்ந்திருந்தால் ரணில் விக்கிரமசிங்கா. இதன்படி ஹாசிம் ஒரு தற்கொலை தாரி என்றும், இவரது பேச்சினாலும், பிரச்சாரத்தினாலும் கவரப்பட்டு, இவரால் மூளைச் சலவை செய்யப்பட்ட பல கொடூரர்கள் இன்னமும் நாட்டில் ஒளிந்திருப்பதாகவும் ரணில் விக்கிரசிங்கா தெரிவித்துள்ளார்.
உங்கள் பகுதிகளில் தீவிரவாதிகள் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக இந்த தொலைபேசி இலக்கங்களிற்கு அழையுங்கள்.
இராணுவ தலைமையகம் :
011 2434251
011 4055105
011 4055106
076 6911604
குண்டு அகற்றும் பிரிவு :
011 2433335
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”