மீண்டும் பதற்றத்தில் கொழும்பு..! நட்சத்திர ஹோட்டல் அருகில் அதி சக்தி வாய்ந்த குண்டு..!
நேற்றைக்கு முன் தினம் இலங்கையில் நடந்த கொடூர தற்கொலை தாக்குதலால் இலங்கை மட்டும் இன்று பல நாடுகளை சேர்ந்த மக்களும் மரணித்திருந்தனர்.
இந்தியா, சீனா, அமெரிக்கா, போர்த்துகல்,நியூசிலாந்த்,அவுஸ்திரேலியா, லண்டன்,சுவிஸ்,என விடுமுறையை இலங்கையில் மகிழ்ச்சியாக கொண்டாட வந்தவர்கள் பலர் தங்கள் உறவுகளையும் இழந்தனர். இதனால் ஒட்டுமொத்த நாடுகளின் பார்வையும் இலங்கையின் மீது தான் தற்போது உள்ளது.
இந்த நிலையில் தற்கொலை தாக்குதல் நடந்து இரண்டு நாட்கள் கடந்த பின்பும் பதற்றம் குறையாது உள்ளது.
விளம்பரம் / வானொலி கேட்கனுமா?
ஏற்கனவே தற்கொலை தாக்குதல் நடந்த சங்ரீலா ஹோட்டல் அருகே சக்தி வாய்ந்த குண்டு இருப்பதாக பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். பொலீஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலீஸாரும் அதிரடி படையினரும் குண்டை செயலிழப்பு செய்யும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளனர். குறித்த குண்டு இது வரை வெடித்த குண்டுகளை விட அதிகம் சக்திவாய்ந்த குண்டு என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்ந்தும் மீட்கப் படும் குண்டு, தற்கொலை தாக்குதலை நடத்த தயாராகும் வாகனங்கள் என மக்கள் பீதியில் உள்ளனர். கொழும்பை குறி வைத்து நடத்தப் படும் இந்த தாக்குதல்கள் தற்போது வரை இடம்பெற்றுக் கொண்டிருப்பது இலங்கையின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கி உள்ளது..!