வெறி கொண்டலையும் இஸ்லாமிய தீவிரவாதிகளும், வெகு விரைவில் உருவாகப் போகும் முஸ்லீம் தனி நாடும்?
இலங்கையில் வாழுகின்ற இஸ்லாமிய சொந்தங்களுக்கும், தமிழ் மக்களுக்கும் நீண்ட காலமாக பிரிவினை நிலவி வருகின்றது என்று சொல்லலாம். இஸ்லாமியர்கள் – தமிழர்கள் என்ற வகையில் இருவரும் வெவ்வேறு துருவங்களாகவே தம்மை அடையாளப்படுத்துகிறார்கள். 2009ம் ஆண்டில், தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், தாமும் தம் வேலையும் என்று தமிழர்கள் இருந்தாலும் இலங்கை வாழ் இஸ்லாமியச் சொந்தங்கள் விடுவதாயில்லை. ஷக்ரான் போன்ற கொடூரர்களின் அடிப்படைவாத கொள்கைக்கு ஆளாகிய சிலர் பழி தீர்க்கும் மனோ பாவத்துடன் அலைகிறார்கள் என்றே சொல்லலாம்.
இலங்கையில், வாழும் தமிழர்கள் என்றால், அதில் தமிழ் பேசும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் எந்த வித மறுப்பும் இன்றி தம்மை தமிழர்கள் என்ற சொற்பதத்தினுள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் தமிழர்கள் என்ற சொற் பதத்தினுள் தம்மை என்றைக்குமே ஏற்றுக் கொள்ள இஸ்லாமியச் சொந்தங்கள் விரும்புவதில்லை, தனித்து தாம் அனைவரும் முஸ்லிம்களே என்ற சொற்பதத்தினுள் வந்து கொள்ளவே விரும்புகிறார்கள்.
இந்த அடிப்படைவாதத் தீவிரவாதிகள் சிங்கள – முஸ்லிம் கலவரம் நிகழ்ந்த பின் உருவாகினார்களா என்றால் கிடையவே கிடையாது. 90களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்த போது இஸ்லாமியர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரே நாளில் விரட்டப்பட்ட கசப்பான சம்பவம் நாம் அனைவரும் அறிந்ததே. அதன் பின்னர் பழி தீர்க்கும் வகையில், இஸ்லாமியர்கள் ஸ்ரீலங்காவின் கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி இலங்கை அரசுடன் முஸ்லிம் ஊர் காவல் படையினை உருவாக்கி தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டார்கள்.
ஸ்ரீலங்கா இராணுவத்தின் படைத்துறைப் புலனாய்வுத்துறையில் அதி முக்கிய பொறுப்புக்களில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டார்கள், ரிஸ்வி மீடின், நிஷாம் முத்தலிப், பாரூக் என்று பல முக்கியஸ்தர்களின் பெயர்களை குறிப்பிடலாம். 90களில் இஸ்லாமியர்கள் இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து அகற்றப்பட்டத்தற்கு பழி தீர்க்கும் வன்மத்தினை பல்வேறு சம்பவங்கள் ஊடாக கிழக்கு மாகாணத்திலும், இலங்கை இராணுவத்துடன் இணைந்தும் செய்திருந்தார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனாலும் இந்த பழி தீர்க்கும் மனோபாவம் அடங்குவதாக இல்லை. இப்போதும் வெறி கொண்டு அலைகிறார்கள் என்றே கூறலாம்.
இந்த வன்மம் கடந்த ஈஸ்டர் குண்டு வெடிப்பு வரையும் தொடர்ந்திருக்கிறதே என்றே கூறலாம். இதில் பாதிக்கபப்ட்டவர்களில் அதிகமானோர் தமிழர்களே. சிங்களவர்கள் அல்ல, கடந்த வருட முஸ்லிம் – சிங்கள இனக் கலவரங்களிற்கு பழி தீர்க்கும் வகையில் இந்த கொடூரம் நிகழ்ந்ததா என்றால் கிடையாது! அப்படியாயின் ஸ்ரீலங்காவின் சிங்கள பிரதேசங்கள், ஸ்ரீலங்கா வாழ் சிங்கள மக்களின் மீதல்லவா தாக்குதல் நடந்திருக்க வேண்டும்?
இந்த தாக்குதலின் பின், கூட சில இஸ்லாமிய முகநூல் கணக்குகள், முகநூல் குழுமங்கள் ஊடாக, கிழக்கிலங்கை முஸ்லீம் படுகொலைகளுக்கு எதிராக இந்த தாக்குதல் என்றே குறிப்பிடப்படுகின்றது, தவிர இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல் என்று எந்த ஊடகம் குறிப்பிட்டாலும், அதன் கீழ் புலிகள் கடந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்திய படுகொலைகளை பின்னூட்டமாக பகிர்ந்து சுய சொறிதல் காண்கிறார்கள் சில வெறி கொண்ட விஷமிகள்.
அப்படியாயின், இந்த தாக்குதல் தமிழ் மக்களுக்காகவா? கிழக்கிலங்கை மட்டக்களப்பு தேவாலயத்தில் தாக்குதல் இடம் பெற்ற சமயம் சிங்களவர்கள் இருந்தார்களா? கிடையவே கிடையாது. அப்படியாயின் முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறி கிழக்கிஸ்தான் உதயம் எனப்படுவது ஈழத் தமிழர்கள் ‘மேய்ப்பாரற்று’ இருக்கும் சமயத்தில் கூண்டோடு அழிக்கும் இனவாத செயற்பாட்டின் மூலமாக உருவாக்கப்பட உள்ளதா? இவை அனைத்தும் உங்கள் சிந்தனைக்காக.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை எமது புரட்சி ஊடக குழுமத்திற்கு இலங்கை கிழக்கு மாகாணத்திலிருந்து நரேன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட கட்டுரையாகும்.