வாரத்தில் 4 நாட்கள் வேலை; பின்லாந்து பிரதமரின் அக்கறை!
2019ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் திகதி, பின்லாந்தின் பிரதமராகப் பதவியேற்றவர்தான் சன்னா மரின். இவர், உலகளவில் மிக இளமையான (வயது-34) பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இது இவ்வாறிருக்க, அவர் பின்லாந்து மக்களின் நன்மை கருதி புதியதோர் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அதாவது, தமது நாட்டு மக்கள் அனைவரும் தமது குடும்பங்கள், நண்பர்கள், பொழுதுபோக்கு மற்றும் கலாசாரம் என்பவற்றுடன் அதிக நேரத்தைக் கழிக்கக்கூடிய நிலைமை ஏற்படவேண்டும் என விரும்புகிறார். அதன்படி, வாரத்தில் நான்கு நாட்களை மாத்திரமே வேலை நாட்களாகப் பிரகடனப்படுத்தவும், அலுவலக வேலை நேரத்தை ஆறு மணித்தியாலங்களாக நிர்ணயிக்கவும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
இதன்கான பரிசோதனை முயற்சிகளுக்கான காலத்தை ஏற்பாடு செய்யுமாறு கோரியுள்ளார்.
பின்லாந்தில் தற்போது ஐந்து வேலை நாட்களாகவும் எட்டு மணித்தியாலங்கள் அலுவலக நேரமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.