சென்னை திருமுல்லைவாயில் செந்தில் நகரைச் சேர்ந்த தேவானந்த் என்பவரின் மனைவி ஆனந்தி என்பவர் தனக்கு மாமியார் கொடுமை செய்வதாக கடிதம் மற்றும் காணொளி பதிவு ஆகியவற்றில் வாக்குமூலம் வழங்கி விட்டுத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கடந்த வருடம் திருமணமான நாளிலிருந்து அவர்கள் தனக்குக் கொடுமை செய்வதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இவர் எட்டுப் பக்கத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டும், இரண்டு வீடியோக்களைப் பதிவுசெய்து வாட்ஸ்அப்பில் தன் குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்துவிட்டுமே தற்கொலை புரிந்துள்ளார்.
தனது மாமியார் மிகவும் கொடுமைக்காரி என்றும், மாமனார் பயந்தாங்கொள்ளி என்றும், கணவர் அம்மா – அப்பாவுக்குப் பயந்த கோழை என்றும் குறிப்பிட்டுள்ள அவர் ஏழைக்கு மனைவியா வாழ்ந்தாலும் கோழைக்கு மனைவியா வாழ முடியாது. அதைவிட சாவதே மேல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.அவரது உடலை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்