விபத்தில் உயிரிழந்த பிரபல இசையமைப்பாளர் குழந்தை – உயிருக்குப் போராடும் பெற்றோர்..!
இந்தியாவின் மலையாள திரைப்பட துறையில் முன்னணி இசையமைப்பாளராக விளங்கும் பாலா பாஸ்கர் தனது மனைவி மற்றும் மகளுடன் ஆலயம் சென்று வரும் வழியில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். விபத்தில் அவரது 2 வயது மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருச்சூரில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு வழிபாட்டுக்காக தனது மனைவி லட்சுமி மற்றும் மகள் தேஜஸ்வினி ஆகியோருடன் சென்று வீடு திரும்பிய வேளையில் பள்ளிபுரம் எனுமிடத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்துச் சம்பவத்தில் பால பாஸ்கரும் அவரது மனைவியும் படுகாயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது மகள் தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைச் செலுத்திச் சென்ற சாரதியும் படுகாயமடைந்துள்ளார்.
பாலா பாஸ்கர் பிரபல வயலின் இசைக் கலைஞராகவும் விளங்குகின்றார். 12 வயதில் தொடங்கிய இசைப் பயணத்தில் தனது 17 ஆவது வயதில் “மாங்கல்ய பல்லக்கு” என்ற திரைப்படத்திற்கு இசையமைத்ததன் ஊடாக மக்களிடம் பிரபல்யம் பெற்றார்.
2000 ஆம் ஆண்டில் பாலா பாஸ்கர் – லட்சுமியைக் கைப்பிடித்திருந்த போதிலும் 16 வருடங்கள் கடந்த நிலையிலேயே அவர்களுக்கு தேஜஸ்வினி மகளாகப் பிறந்திருந்தார். இந் நிலையில் அவருக்கு ஏற்பட்டுள்ள விபத்து மலையாள திரைப்பட உலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”