இன்றைய தினம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்..!!
இன்றைய தினம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குபதிவு ஆரம்பமாகியுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு 2 கட்டமாக நடைபெறும். அந்த வகையில் முதல் கட்டமாக இன்றைய தினம் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிவரை நடைபெறும்.
தமிழகத்தில் இன்று அமைதியாக நடைபெறும் தேர்தலில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4,700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37,830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு போட்டியிடுபவரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதற்காக 24,680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர். ஒரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்களும், பாதுகாப்பு பணிக்காக 63,000 பொலிசாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.