காதலி பேச மறுத்ததால் வீடியோ காலில் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காதலன்..!! தமிழகத்தில் நடந்த சோகம்..!
புதுவையை சேர்ந்த 31 வயதுடைய சுரேஷ் என்ற இளைஞன் வழக்கறிஞர் பணியாற்றி வருகிறார். அவர் புதுவை சட்டக்கல்லூரியில் படித்த போது கூட படித்த கடலூரை சேர்ந்த இளம் பெண் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். இது தொடர்பாக காதல் ஜோடி இருவரும் தங்களது பெற்றோரிடம் தெரிவித்து திருமணம் செய்து கொள்ள இருவரும் சம்மதம் பெற்றனர்.
அதைத் தொடர்ந்து காதல் ஜோடி இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு நிலையில் 27 ஆம் திகதி திருமணம் நடத்த பெற்றோர்களால் ஏற்பாடுகள் செய்யப்பட்ட வந்த நிலையில் அந்த பெண் திடீரென்று சுரேசுடன் பேசுவதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து பேச முயன்ற ஆனால் அந்த பெண் அவரின் பேசுவதை தவித்தார். இதனால் கவலை அடைந்த சுரேஷ் சம்பவ தினம் அன்று இரவு அந்த பெண்ணிடம் செல்போன் மூலம் வீடியோ அழைப்பில் பேசினார்.
அப்போது நீ என்னுடன் பேச மறுத்ததால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று கூறி நாற்காலியில் நின்ற படி மின்விசிறியில் தூக்கு மாட்டினார். அதன் பிறகு தொலைபேசி துண்டிக்கப்பட்டது. ஏதோ விளையாட்டுக்குத்தான் சுரேஷ் இப்படி செய்கிறார் என்று அந்த பெண் நினைத்துக்கொண்டாள். இருப்பினும் பதற்றம் அடைந்த அவள் அந்த பகுதியை சேர்ந்த தனது நண்பர் சிவசக்தி என்பவரிடம் இது பற்றி தகவல் கூறினார்.
உடனே அவர் சுரேஷ் வீட்டுக்கு சென்று, அவருடைய குடும்பத்தினரிடம் கூறினார். அங்கு சுரேசின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டிப்பார்த்தும், திறக்கப்படாததால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்த போது சுரேஷ் தூக்கில் தொங்கிய படி இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுரேஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதற்கு இடையில் கடலூரில் இருந்து அந்த பெண்ணும் புதுவைக்கு வந்தார். அவரிடம் சுரேசின் மரணம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.