திருமணமான 3 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை..!! தமிழகத்தில் நடந்த சோகம்..!!
திருமணமான மூன்று நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தின் சக்கரமல்லூர் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகள் 21 வயதுடைய திவ்யா என்ற இளம் பெண்ணுக்கும், சென்னை திருநின்றவூரை சேர்ந்த 25 வயதுடைய ராகவேந்திரன் என்ற இளைஞனுக்கும் கடந்த 7ஆம் திகதி திருமணம் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிலையில், நேற்றைய தினம் திவ்யா, கணவர் ராகவேந்திரனுடன் சக்கரமல்லூர் கிராமத்திலுள்ள தாய் வீட்டுக்கு விருந்துக்கு வந்தார். வீட்டில் எல்லோரிடமும் சகஜமாக பேசினார். சிறிது நேரம் கழித்து வீட்டிலுள்ள அறையில் ஓய்வு எடுப்பதாக கூறி சென்ற திவ்யா நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் கதவை தட்டி அழைத்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.
அதனால் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு திவ்யா தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து திவ்யாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமான 3 நாட்களில் திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.