ஈஸ்வர் மஹாலட்சுமி கள்ளக் காதல் ஆதாரத்துடன் வெளியிட்ட நடிகை ஜயஸ்ரீ..! இதோ வீடியோ இணைப்பு..!!
அண்மையில் பரபரப்பாக பேசப் பட்டுக் கொண்டிருக்கும் விடயம் சீரியல் நடிகர் ஈஸ்வர் மஹாலட்சுமி கள்ளக் காதல் விவகாரம் தான். தனது மகளையும் தன்னையும் நடிகர் ஈஸ்வர் கொடுமை படுத்தியதுடன் சீரியல் நடிகையான மஹாலட்சுமியுடன் கள்ளக் காதலில் இருக்கிறார் என குறிப்பிட்டார். இதன் போது மஹாலட்சுமி தலைமறைவானார். ஈஸ்வர் கைது செய்யப் பட்டார்.
பிணையில் வெளியே வந்த ஈஸ்வர் தனது மனைவி ஜயஸ்ரீக்கும் மஹாலட்சுமியின் கணவருக்கும் தான் தொடர்ப்பு என கூறினார். இதற்கு பதில் அளித்துள்ள மஹாலட்சுமியின் கணவர் அணில் நான் இரண்டு முறை தான் ஜயஸ்ரீயை நேரில் சந்தித்து இருக்கிறேன். அதுவும் மஹாலட்சுமி ஈஸ்வர் காதல் ஆரம்பித்த பிறகு தான். நண்பர்களுடன் சென்று தான் சந்தித்து பேசினோம். எங்களுக்குள் வேறு உறவு கிடையாது.
எனது மனைவிக்கும் எனக்கும் எந்த சண்டையும் இல்லை சீரியலில் நடிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே என்னிடம் விவாகரத்து கேட்க ஆரம்பித்து விட்டார். காரணம் கேட்டும் சொல்லவில்லை. தினமும் சண்டை என்பதால் மட்டுமே விவாகரத்திற்கு சம்மதித்தேன்.
இப்போதும் அவளை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். மஹாலட்சுமி ஈஸ்வருடன் பழக ஆரம்பித்த பின் தான் விவாகரத்து கேட்டுள்ளார் என்பது அதன் பின்பு தான் எனக்கு தெரியவந்தது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது பற்றி தலைமறைவாக இருந்து வெளியே வந்த மஹாலட்சுமி கூறுகையில் ஜயஸ்ரீக்கும் என் கணவருக்கும் தான் தொடர்பு என ஈஸ்வர் கூறுவது போலவே கூறியுள்ளார். இது பற்றி தற்போது ஜெயஸ்ரீ ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஈஸ்வர் பேசியவை கொடுமை படுத்தியது என அனைத்தும் பதிவாகி உள்ளது…!