உப்பாற்று பிரதேசத்தில் படகு கவிழ்ந்து நபர் ஒருவர் பலி..!!
கிண்ணியாவின் உப்பாற்று பிரதேசத்தில் கடலில் பயணித்த படகு கவிழ்ந்து நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் 02 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் இந்த நபர்கள் மஹவெலி கங்கை ஊடாக படகு ஒன்றில் பயணிக்க முயற்சித்த வேளையில் இவ்வாறு படகு கவிழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் நடைபெற்ற வேளையில் படகில் 05 பேர் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவர்களில் இருவர் நீந்தி கரை சேர்ந்துள்ளனர். அதிக மழையுடனான காலநிலை காரணமாக நீரின் வேகம் அதிகரித்துள்ளது. அத்துடன் காணாமல் போன இருவரை கடற்படை படையினர் தீவிரமாக தேடி வருவதாக கூறப்படுகின்றது.