முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கு தீர்மானம்…!!!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி உறுப்புரிமையில் இருந்து ஏ.எச்.எம்.பௌசி நீக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த நிலையில் அவருக்கு பதிலாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கு திட்டமீட்டுள்ளனர்.
பௌசியின் உறுப்பிரிமையை நீக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் நாடாளுமன்ற செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அந்த கடிதம் தனக்கு கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற செயலாளர், மஹிந்த அமரவீரவிடம் அறிவித்துள்ளார். அதற்கு அமைய எதிர்வரும் தினங்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.
நாடாளுமன்றத்திற்கு வந்த பின்னர் மைத்திரிக்கு அமைச்சரவை அமைச்சர் பதவி ஒன்று கிடைக்கும் என உயர்மட்டத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.