இலங்கையின் தற்போதைய பிரதமரை சந்திப்பதற்காக கட்சித் தலைவர்கள் மேற்கொள்ளவுள்ள விசேட நடவடிக்கைகள்..!!
இலங்கை அரசாங்கத்திற்கு தற்போது உள்ள சவால்களை எவ்வாறு வெற்றி கொள்ளலாம் என்பது தொடர்பான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கையின் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அரசாங்கத்தில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றது. அதில் குறிப்பிட்ட விடயம் பற்றி செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் தொடர்பில் கண்டறிய விசேட குழுவொன்றை நியமிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானமானது பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னரே எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சந்திப்பின் போது அரசாங்கத்தில் உள்ள சவால்கள் குறித்தும் அவற்றை எவ்வாறு எளிதில் வெற்றி கொள்ளலாம் என்பது தொடர்பான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.