திருமணமான 2 மாதத்தில் இன்னும் எனக்கு 50 லட்சம் வரதட்சணை தருமாறு கூறி கொடுமைப்படுத்திய கணவன்…!! புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு..!!!
கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தெலுங்கானாவை சேர்ந்த 31 வயதுடைய சிம்மாத்ரி பால கிஷோர் என்ற இளைஞனுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஈஷா பானி என்ற இளம்பெண்ணுக்கும் பெற்றோரின் சம்மதத்தோடு மிக சிறப்பாக திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது மணப்பெண் வீட்டரிடம் ரூ 50 இலட்சம் பணம், மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களை கிஷோர் மற்றும் அவர் குடும்பத்தார் வரதட்சணையாக கேட்டனர். மேலும் இந்த நிலையில் திருமணமான சில நாட்களிலேயே ஈஷாவை அடித்து சித்திரவதை செய்ய ஆரம்பித்த கிஷோர், அவரை மன ரீதியாகவும்துன்புறுத்தி வந்தார். அதாவது அமெரிக்காவிற்கு செய்வதற்காக தனக்கு 40 இலட்சத்தில் இருந்து 50 லட்சம் வரை வரதட்சணை வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தனது பெற்றோரிடம் ஈஷா கூறிய நிலையில், அவர்கள் கிஷோரிடம் வந்து சமாதானம் பேசினார்கள். இனி தயவு செய்து எங்கள் மகளை துன்புறுத்தாதீர்கள், நாங்கள் 25 லட்சம் வரதட்சணை கொடுக்கிறோம் என கூறினர். ஆனாலும் தொடர்ந்து மனைவியை கிஷோர் துன்புறுத்தி வந்ததால் மனமுடைந்த ஈஷா திருமணமான இரண்டு மாதத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
அதைத் தொடர்ந்து கிஷோரின் வரதட்சணை கொடுமையால் தான் ஈஷா உயிரிழந்தார் என பொலிஸில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். நேற்றைய தினம் இந்த வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி கிஷோருக்கு 07 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.