குழந்தையின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பேஸ்புக், வாட்ஸ்அப், மெஸ்சேன்ஜ்ரில் பகிர்ந்ததாக கூறி நபர் ஒருவர் கைது..!!!
நேற்றைய தினம் திருச்சியில் குழந்தையின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்ததாக கூறிய கிறிஸ்டோபார் அல்போன்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். சமூக வலைத்தளங்களில் பிரபல்யம் அடைந்து வருகின்ற பேஸ்புக், வாட்ஸ்அப், மெஸ்சேன்ஜ்ர் மூலமாக 15 பேருக்கு ஆபாச படங்களை அனுப்பியதாக கூறி கிறிஸ்டோபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குழந்தைகள் ஆபாச படம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கிறிஸ்டோபரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். கிறிஸ்டோபரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். அதில் நிலவன் என்ற புனை பெயரில் பேஸ்புக் கணக்கு ஆரம்பித்து அதில் குழந்தைகள், சிறுமிகளுடன் வன்புணர்வில் ஈடுபடும் காமுகர்களின் ஆயிரக்கணக்கான படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்துள்ளார்.
கிறிஸ்டோபரின் 150 நண்பர்களின் பட்டியலை திரட்டி திருச்சி, சென்னை, செங்கல்பட்டு, கோவை ஆகிய 4 மாவட்ட காவல் நிலையத்துக்கு திருச்சி பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த 4 மாவட்டங்களில் உள்ள கிறிஸ்டோபரின் நண்பர்களிடமும் விசாரணை இடம்பெற்று வருகின்றனர். திருச்சியில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் நண்பர்கள் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.