ஓடும் பஸ்ஸில் நிர்பயாவை கொடூரமாக கற்பழித்து கொலை செய்த நால்வரையும் தூக்கிலிட நான் தயார்..! அதிரடிக்கு தயாராகும் தமிழக தலைமை காவலர்..!!
2012ம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா ஓடிக் கொண்டிருக்கும் பேரூந்தில் வைத்து 6 கொடூர மிருங்கங்களால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப் பட்டார். இந்த சம்பவம் டாக்டர் பிரியங்காவின் மரணம் போல் உலகளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது…
பலரும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கும் படி போரட்டங்கள் நடத்தினார்கள். இந்த சம்பவத்தில் ராம்சிங், வினய், முகேஷ் சிங், சர்மா, பவன் குப்தா தாகூர், ஆகியோருடன் 16 வயது சிறுவன் ஒருவனும் கைது செய்யப் பட்டான். 6 பேரில் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப் பட்ட நிலையில் 16 வயது சிறுவனுக்கு 3 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதில் ராம்சிங் சிறையில் தற்கொலை செய்துகொண்டான். மீதமுள்ள நால்வருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப் பட்ட நிலையில் இதனை நிறைவேற்ற திகார் சிறையில் ஆள் இல்லை என அறிவித்திருந்தனர். இதனால் குற்றவாளிகள் கடந்த 7 வருடமாக நிம்மதியாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து ஒரு குரல் நிர்பயாவின் குற்றவாளிகளுக்கு கொடுத்த தண்டனையை ஊதியம் இன்றி நிறைவேற்ற தயாராக இருப்பதாக கடிதம் எழுதியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கையால் அண்ணா விருது வாங்கிய இராமநாதபுரத்தை சேர்ந்த தலைமை காவலர் சுபாஷ் சினிவாசன் அவர்களின் குரலே அது.
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றுள்ள நால்வரையும் தூக்கிலிட நான் தயார் சம்பளம் கூட வேண்டாம். திகார் சிறையில் ஆள் இல்லாததால் தான் சிறையில் இடவில்லை என தெரிவித்து இருந்தீர்கள் நான் தயாராக இருக்கிறேன் என தலைமை காவலர் சுபாஷ் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்..!