ஜூன் 21 வானில் 6 மணி நேரம் மாயாஜாலம் செய்யப் போகும் நீண்ட நேர நெருப்பு வளைய சூர்ய கிரகணம்..! இந்திய மற்றும் ஏனைய நாடுகளில் தோன்றும் நேரம் இதோ..!!
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 26ம் திகதி ஏற்பட்ட சூரிய கிரகணத்தின் பின் இந்த வருடம் ஆனி மாதம் 7ம் திகதி அதாவது ஜூன் 21ம் திகதி 2020ம் ஆண்டின் முதல் சூர்ய கிரகணம் தோன்ற உள்ளது. இந்த சூரிய கிரகணம் நெருப்பு வட்ட அல்லது நெருப்பு வளைய சூர்ய கிரகணம் என்று அழைக்கப் படுகிறது.
இதனை பாகிஸ்தான், சீனா, இந்தியா, மற்றும் ஆப்ரிகாவின் சில இடங்களில் பார்க்க முடியும் என கூறப்படுகின்றது. இந்த சூர்ய கிரகணமானது சுமார் 1தொடக்கம் 6 மணி நேரங்கள் இருக்கும் என கூறப்படும் அதே நேரம் இந்தியாவில் எப்போது தொடங்கும், மக்கள் இதனை எப்போது பார்க்கலாம் என்பது தொடர்பான விடயங்கள் வெளியாகி உள்ளது.
இந்த சூர்ய கிரகணமானது ஜூன் 21 இந்திய நேரப்படி காலை 9.15திற்கு தொடங்குகிறது. இது சுமார் 6 மணி நேரங்கள் வானில் மாயஜாலங்கள் காட்டி பிற்பகல் 03.04 மணிக்கு நிறைவடைகிறது. இந்த சூர்ய கிரகணத்தை தமிழ் நாட்டில் காலை 10.15.32 மணியில் இருந்து காணலாம்.
சென்னையில் 10.21 க்கும், கோவையில் 10.12க்கும், திருச்சியில் 10.18 க்கும், மதுரையில் 10.17 க்கும் தொடங்குகிறது. மற்றைய கிரகணங்களை போலவே இந்த கிரகணத்தையும் வெறும் கண்களால் பார்க்க முயற்சிக்க வேண்டாம். கிரகணங்களை கண்களால் நேரடியாக பார்க்கக் கூடாது. இப்படி பார்ப்பதால் ஆபத்து. எனவே கிரகணம் பார்ப்பதற்கு ஏற்ற கண்ணாடியால் பார்க்கவும்..!!