சிங்கப்பூரில் சிறுமிகளை சீரழித்த இந்திய வம்சாவளி காவலர் ஒருவர் கைது…!!!!
சிங்கப்பூர் இந்திய வம்சாவளியை சேர்ந்த 25 வயதுடைய அருண் பிரசாந்த் என்பவர் காவல்துறையில் பணியாற்றி வருகின்றார். அருண் பிரசாந்த் 2016 ஆம் ஆண்டில் பல இளம்பெண்களுக்கும், சிறார்களுக்கும் சமூக வலைத்தளம் மூலமாகவும், நேரடியாகவும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் பெற்றோர்களுடன் வந்து அருண் பிரசாந்த் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து பொலிசார் விசாரானை மேற்கொண்டனர்.
மேலும் அவரை சோதனை செய்த போது மொபைல் மற்றும் லேப்டாப்பில் 700 க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாசபடங்கள் இருந்துள்ளன. இதை பார்த்து பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளன.அத்துடன் அவரை
பொலிஸார் கைது செய்தனர். பின் அவரது வேலையும் பறிக்கப்பட்டது. மேலும் இவ் வழக்கு நேற்று சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இவ் வழக்கை விசாரித்த நீதிபதி பிரசாந்த் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்தால் அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளார். அவர் மீதான 21 குற்ற வழக்குகள் விசாரணையில் உள்ளதால், தண்டனை காலம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.