சிங்கப்பூரில் காதலியை 40 முறை பிரம்பால் அடித்த ஆடவருக்கு சிறைத்தண்டனை…!!
சிங்கப்பூரில் 25 வயதுடைய ஆடவர் ஒருவர் தன்னுடைய காதலியை படுமோசமாக 40 தடவை பிரம்பால் அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் இந்த ஆடவர் காதலி தன்னுடன் தங்க மறுத்ததால் காதலியிடம், அவரது குடும்பத்தைத் துன்புறுத்தப் போவதாக ஆடவர் மிரட்டினார்.
தன்னுடைய காதலியின் குடும்பத்தை அச்சுறுத்த வேண்டும் என்றே காயம் விளைவித்தது, பெண்ணை மானபங்கப்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டது. மேலும் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது.
மேலும் ஆடவர் ஓரளவு மனநிலை பாதிக்கப்பட்டவர் இருந்தாலும் அவரது மனநிலைக்கும், குற்றத்துக்கும் தொடர்பில்லை என்றும்அவருக்கு 7 மாதச் சிறைத்தண்டனை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்