பிரித்தானியாவில் மனைவி இன்னொரு ஆணுடன் தொடர்பு…!! இதை அறிந்த கணவரின் கொடூர செயல்..!!
பிரித்தானியாவில் Staffordshire ஐச் சேர்ந்த Phillip Gyde (58), தனது மனைவியான Susan (52) வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதை கண்டு பிடித்த கணவர். மேலும் மனைவிக்கும் அந்த நபருக்கு ஆபாச செய்திகள் அனுப்பியதை கையும் களவுமாக கண்டுபிடித்த Phillip, அவரது மொபைலை டாய்லெட்டில் போட்டு விடுவதாக கூற, இருவருக்கும் சண்டை அதிகரித்துள்ளது.
மேலும் சண்டையின் போது தனது மனைவியை கழுத்தை நெறித்துக் கொலை செய்து விட்டு கணவர் அவர்களின் உறவினருக்கு போன் செய்து தகவலை தெரிவித்தார்.மேலும் இந்த தகவலை கேட்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்து உடனே பொலிஸாரையும் அழைத்து கொண்டு வந்தார்கள். மேலும் மனைவியின் கள்ளக்காதலனுக்கு அவள் எனக்கு இல்லையென்றால் உனக்கும் கிடைக்கமாட்டாள், அவள் இறந்துவிட்டாள் என்று செய்தி அனுப்பி வைத்தார்.
இதனை தொடர்ந்து அங்கு வந்த பொலிசார் Phillipஐ கைது செய்துள்ளது. நான் அவளை மிகவும் விரும்புகின்றேன், அவளை இழக்க எனக்கு மனமில்லை என்று அவர் கூறி விம்மி விம்மி அழுதுள்ளார். Phillip தனது மனைவியைக் கொலை செய்யும் போது அவர்களது மகன் பக்கத்து அறையில் நடந்ததை அறியாமல் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறான். அவரின் மனைவியைக் கொலை செய்த Phillipக்கு நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் 19 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.