ஆசை ஆசையாய் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்த பிரபல நடிகர் மற்றும் நடிகை..! குழந்தை இறந்தே பிறந்த சோகம்..!!
ஒரு தாய்க்கு மிகப் பெரிய இழப்பு என்பது தன் குழந்தையின் மரணம் தான். கருவில் ஆசை ஆசையாய் சுமந்து குழந்தை பூமியை பார்க்கும் முன் மரணமடைவதென்பது உலகில் யாராலும் தாக்கிக் கொள்ள முடியாத ஒன்றாகும், இந்த கொடுமையை பிரபல நடிகர் ஜான் மற்றும் மாடல் கிரிஸி தம்பதிகளுக்கு நடந்துள்ளது.
கிரிஸி மூன்றாவது முறையாக கர்ப்பமான நிலையில் ரசிகர்களுக்கு அறிவித்தார். ஆனால் குழந்தை சில மாதங்கள் மட்டுமே வயிற்றில் உயிருடன் இருந்துள்ளது. குழந்தை இறந்தே பிறந்ததால் சோகம் தாங்க முடியாது கணவன் மனைவி இருவருமே அழுதது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது குழந்தையின் இறப்பு பற்றி பேசியுள்ள கிரிஸி என்னால் என் குழந்தை ஜாக்கின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குழந்தை கருவில் வளர ஆரம்பித்த போதே பெயர் வைத்துவிட்டேன், ஜாக் இந்த பெயரை சொல்லியே வயிற்றில் இருக்கும் போது அழைத்தோம்,
தற்போது அவனது இழப்பு மிகப் பெரிய இழப்பாகும் ஆனாலும் அவன் எங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே இருக்கிறான். என தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் இருந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது..!!