“பிக் பாஸ் வீட்டிற்குள் காதலிப்பது போல் நடித்தேன்” கவினின் அதிரடி பதிவு..!
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவின் முதலாவதாக சந்திக்க சென்றது தன் தாயை சிறையில் தான். தாயை ஜாமீனில் எடுத்த பின் கமலஹாசன் மற்றும் போட்டியாளர்களை சந்தித்த பின் தனது ரசிகர்களை கவின் சந்தித்துள்ளார். அதன் போது சில விடயங்களை பகிர்ந்துகொண்ட கவின் ரசிகர்களுக்கு நன்றி கூறி பதிவொன்றை இட்டிருந்தார். அதில் தனது பிக் பாஸ் பயணம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.
அதில் கொஞ்சம் பணமும் கொஞ்சம் புகழும் கிடைத்தால் போது 7 வாரமாவது குறைந்தது தங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் வீட்டிற்குள் சென்றேன், உலகத்தில் அதிக கஷ்டத்தை அனுபவித்தவன் நான் தான் என்ற எண்ணத்தில் சென்ற எனக்கு அங்கு உள்ள போட்டியாளர்களின் கஷ்டங்கள் மனதை மாற்றியது. என்னை விட எத்தனை துன்பத்தில் இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டேன்.
அதனால் பைனல் செல்லும் எண்ணத்தை ஆரம்பத்துலேயே கைவிட்டு விட்டேன். ஆரம்பத்தில் சிலரிடம் நடிப்பு கூறிவிட்டு சில விடயங்களை ஆரம்பித்தேன் அவர்களும் ஆமாம் என்றார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் விபரீதமாக மாற இப்போதைக்கு இவை வேண்டாம் என்றதும் பூகம்பமே வெடித்தது.
அனைவரும் அறித்து வெறும் நடிப்பாக நினைத்து நான் நடித்தது, அவர்களும் நடிக்கிறார்கள் என்று நினைத்தது அனைத்தும் மனதளவில் என்னை உடைத்து வெளியேற தூண்டியது. அப்போது பற்றிய கரம் தான் இறுதி வாரம் வரை அழைத்து வந்தது. நீங்கள் எல்லோரும் என்மேல் ஏராளமான எதிர்பார்ப்புகள் வைத்திருந்திருப்பீர்கள் , அவற்றை என்னால் நிறைவேற்ற முடியவில்லை மன்னித்து விடுங்கள்.
என்னை வெறுப்பவர்களுக்கு நன்றி, ஆரம்பத்தில் மட்டுமே நடித்தேன் அதன் பின் நான் நானாக இருக்கிறேன். இனி உங்களுக்கு பிடித்தவராக மாற முயற்சிக்கிறேன். என் ரசிகர்களான உறவுகளுக்கும் நன்றி இனியும் என்னோடு இருங்கள… காத்திருப்புகள் அழகானவை என் குறிபிட்டுள்ளார்..!