ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச வேட்பு மனுத் தாக்கல்..!!!
இலங்கையில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ வேட்பு மனுத் தாக்கல் மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல தனது கடவுச்சீட்டைக் ஒப்படைக்குமாறு கோரி, மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஊடாக விண்ணப்பம் செய்துள்ளார்.
இந்த நிலையில் கோத்தபாய ராஜபக்சவின் இந்த கோரிக்கை தொடர்பாக எதிர்வரும் 03 ஆம் திகதி சட்ட மா அதிபர் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என விஷேட மூவர் கொண்ட மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. எதிர்வரும் 9 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை மருத்துவ சிகிச்சைகளுக்காக சிங்கப்பூருக்கு போவதாகவும் நகர்த்தல் பத்திரத்தினூடாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.
அதையடுத்து எதிர்வரும் 7ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ளதால் , தாம் இலங்கைப் பிரஜை என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆவணங்களில் ஒன்றான கடவுச்சீட்டு தற்போது நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ளதால் அதனை மீளக் கையளிக்குமாறு கோத்தபாய ராஜபக்ச அந்த நகர்த்தல் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.