காலையில் எந்தெந்த தெய்வங்களுக்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் ?
நமது அன்றாட வாழ்வில் இறை வழிபாடு முக்கிய இடத்தில் பிடித்துள்ளது. அதை விட விளக்கு ஏற்றி இறைவனை வழிபாடுதல் என்பது தமிழர்களின் பாரம்பரிய இறை வழிபாடாகும். இதனால் நமக்கு மட்டும் இன்றி நமது வீட்டுக்கு தெய்வீகப் பேரொளியும் லட்சுமி கடாட்சமும் வருவதாக ஐதீகம் எனப்படுகிறது.
காலையில் எழுந்தவுடன் நமது வீட்டையும் சுத்தம் செய்து எங்களையும் சுத்தம் செய்து விளக்கேற்றி தெய்வத்தை வழிபட்டு, அதன் பிறகு அன்றைய வேலைகளைச் செய்யத் தொடங்கும் போது மனதில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் தைரியமும் ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
அது மட்டுமின்றி நமது முன்னோர்கள் எந்த தெய்வதற்கு எப்படி விளக்கு ஏற்ற வேண்டும் என்ற விதிமுறையை விதித்துள்ளனர். அந்த வகையில் தற்போது எந்த தெய்வத்துக்கு எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
- ராகுதோஷம் – 21 தீபங்கள்
- சனிதோஷம் – 9 தீபங்கள்
- குரு தோஷம் – 33 தீபங்கள்
- துர்க்கைக்கு – 9 தீபங்கள்
- ஈஸ்வரனுக்கு – 11 தீபங்கள்
- பெருமாளுக்கு – 15 தீபங்கள்
- சக்திக்கு – 9 தீபங்கள்
- மகாலட்சுமிக்கு – 5 தீபங்கள்
- முருகனுக்கு – 9 தீபங்கள்
- வினாயகருக்கு – 5 தீபங்கள்
- ஆஞ்சினேயருக்கு – 5 தீபங்கள்
- காலபைரவருக்கு – 1 தீபம்
- திருமண தோஷம் – 21 தீபங்கள்
- புத்திர தோஷம் – 51 தீபங்கள்
- சர்ப்பதோஷம் – 48 தீபங்கள்
- காலசர்ப்பதோஷம் – 21 தீபங்கள்
- களத்திர தோஷம் – 108 தீபங்கள்