வணக்கம் பிரண்ட்ஸ் .! இது கொஞ்சம் கஸ்டமான செய்தி தான் தயவு செய்து படித்து பகிருங்கள் இது தான் பெற்றோருக்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய உதவி. இன்றிலிருந்து 100 நாட்களுக்கு முன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மானமதி என்ற இடத்தில் தற்காலிகமாக வசித்து வந்த வெங்கடேஷன் காளியம்மாள், தம்பதியினருக்கு ஹரினி என்ற இரண்டு வயது குழந்தை இருந்துள்ளது. இந்த தம்பதியினர் நாடோடிகள் இனத்தை சார்ந்தவர்கள். ஒரு வாரம் ஒரிடத்தில் தங்கக் கூடியவர்கள்.பாசி மாலைகள் கோர்த்து விற்பவர்கள். நீங்களும் நானும் சாதாரணமாக கடந்து செல்லும் மனிதர்களுக்குள் இவர்களும் அடங்குவார்கள்.
இவர்கள் அணைக்கட்டு என்ற பிரதேசத்திற்கு பாசி மாலை விற்கச் சென்ற போது இருட்டி விட்டதால் வழமை போல் அணக்கட்டு பிரதேசத்தில் வீதி ஓரத்தில் கணவன் மனைவி குழந்தை மூவரும் உறங்கி உள்ளார்கள். திடீர் என இரவு எழுந்து பார்த்த காளியம்மாள் குழந்தையை காணவில்லை என துடித்துள்ளார்.
எல்லா இடத்திலும் தேடி கிடைக்காததால் அணைக்கட்டு பொலீஸில் புகார் கொடுத்துள்ளார். நாடோடி இனம் என்பதால் பொலீஸார் வேறு குழந்தை பெற்றுக்கொள் என கிண்டல் செய்ய காளியம்மாளோ பொலீஸ் ஸ்டேசன் வாசலிலேயே கதறிய படி இருந்துவிட.
இதை அறிந்த கரூர் இணைந்த கைகள் அமைப்பு ஹரிணி யின் அம்மாவிற்கு உதவ முன் வந்து சமூக வலைத்தளத்தில் ஹரினியின் புகைப்படங்கள் வெளியிட்டு கண்டுபிடித்து தருபவருக்கு ஒரு லட்சம் வரை தருவதாக கூறியுள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவிய போது வழமை போல் இளைஞர்கள் செயலில் இறங்கியுள்ளனர்.
காவல்துறையும், தன்னார்வ நிறுவனங்களும் எப்படியாவது ஹரிணியை கண்டுபிடித்து தாயிடம் சேர்ப்பதென முடிவெடுத்து தேடுதல் வேட்டையை தொடர்ந்ததில் சிசி டிவியில் இளைஞர் ஒருவர் சிக்க அவரை கைத்து செய்து விசாரித்ததில் சிறுமி ஹரிணி திருப்போரூரில் ஒரு வீட்டில் இருந்து மீட்கப் பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. ஆனால் இது போன்ற கடத்தல்கள் இன்னும் குறையவில்லை. தொடர்ந்துகொண்டே தான் இருக்கின்றது. இதனை நிச்சயம் தடுக்க வேண்டும். இளைஞர்களே இனி உங்கள் கையில்..!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”