சினிமாவில் கலக்கப் போகும் லொஸ்லியா..! வாய்ப்பு கொடுக்கப் போவது யார் தெரியுமா..!?
நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கு பிரயோசனம் உள்ளதாக அமைந்தது என்று தான் கூற வேண்டும்.ஒவ்வொருவராக கமலஹாசன் அவர்கள் சரியான முறையில் அறிவுரை வழங்கினார், அதிலும் முகென், தர்சன், லொஸ்லியாவிற்கு போட்டி என்பதை நினைவு படுத்தினார். லொஸ்லியாவுடன் கமலஹாசன் பேசும் போது ஒருவருக்காக விட்டுக் கொடுப்பேன் என்று சொல்வது உங்களுக்கு சரியான விடயம் அல்ல உங்கள் நாட்டில் திறமை வாய்ந்த ஏராளமான பெண்கள் இருக்கையில் உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். நீங்கள் வெற்றிபெற்று வரும் வரை உங்கள் நாட்டு மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என கூறினார். அதே போல் சேரனின் சினிமா குருவான கே எஸ் ரவிக்குமார் அவர்கள் பேசுகையில் சேரனிடம் உனக்கு மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அதனை மனதில் வைத்து நடந்துகொள் என கூறிவிட்டு நான் மூன்று பெண் குழந்தைகள் என கூறியது…
லொஸ்லியாவையும் சேர்த்து தான். லொஸ்லியாவிற்கு சேரப்பா மீது கோபம் இருந்தாலும் அதிக அளவான பாசம் இருக்கிறது என கூறியதுடன் வெளியே வந்தபின் லொஸ்லியாவிற்கு சினிமா வாய்ப்புகள் குவியும் இப்போதே உனக்கு வாய்ப்பு வந்துவிட்டது என கூறினார். இதனை வைத்து பார்க்கும்போது கே எஸ் ரவிக்குமார் லொஸ்லியாவிற்கு வாய்ப்பு கொடுப்பார் என கூறப்படுகின்றது..!!
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.