பிக் பாஸ் வீட்டிற்குள் கவின் சாண்டி உட்பட 5பேர் மீது பரபரப்பு புகார்..!! காரணம் இது தானாம்..!
கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டவர் நடிகை மதுமிதா. யாரும் எதிர்பாராத விதமாக திடீரென வெளியேற்றப் பட்ட மதுமிதா கமலஹாசன் அருகில் நின்ற போது மதுமிதாவின் ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள், ஏன் வெளியேற்றப் பட்டார் என்ற கேள்விக்கான பதிலாக அவர் கையை அறுத்துக் கொண்ட விடயம் இருந்தது.
வெளியே வந்த மதுமிதா குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டே இருந்தார். அதன் பின் மீடியாக்களை சந்தித்த மதுமிதா விஜய் டிவியினர் தனது முழு சம்பள பணத்தையும் தந்துவிட்டதாக கூறினார். அத்துடன் பிக் பாஸ் வீட்டிற்குள் சேரன் மற்றும் கஸ்தூரி தவிர்த்து மற்ற அனைவரும் தன்னை துன்புறுத்தியதாக தெரிவித்தார்.
அதன் பின் இனி இதனை பற்றி யாரும் பேச வேண்டாம் விட்டுவிடுங்கள் என கூறியிருந்தார்.. இந்த நிலையில் மனித உரிமைகள் அமைப்பில் மதுமிதாவிற்கு நீதி வேண்டும் என மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளதாக மனித உரிமைகள் குழு உறுப்பினர் விஜயலட்சுமி தேவராஜன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மதுமிதாவை துன்புறுத்திய 5 நபர்களின் பெயர் கிடைத்துள்ளாம். அதில் செரின், கவின், சாண்டி, தர்சன், வனிதா, லொஸ்லியா அடங்குவதாக தெரிவிக்கப் படுகின்றது. இந்த ஐந்து பேர் மீதான புகார் விசாரிக்கப் பட்டு அதற்கான தீர்வு காணப் படும் என விஜயலட்சுமி தேவராஜன் மேலும் தெரிவித்துள்ளார்..!!
#Madhumitha @vijaytelevision @ikamalhaasan Need enquiry Kavin#humanrights @humanrights1st
. Sandy should be send out immediately@vijaytelevision @ikamalhaasan Need serious answer
Vijayalakshmi Devarajan
Women Achiever
Ministry of Women and Child Development pic.twitter.com/TTgtizGW0i— Vijayalakshmi Devarajan ?? (@vijiscdl) August 17, 2019
Glad @vijiscdl for standing up.for right cause in supporting madhu@madhumithamoses #madhumitha#wesupportmadhu#biggbosstamil3 pic.twitter.com/JR1XDBLJBo
— Malini Ram (@malini_ram) September 18, 2019