இந்த செடி உங்கள் வீட்டில் அல்லது ஊரில் இருக்கா..? அப்பிடீன்னா வேரோடு பிடுங்கி வீட்டுக்கு எடுதிட்டு போயிடுங்க…ஏன் தெரியுமா.? இத படியுங்கள்..!!
“மூக்குத்திப் பூ செடி” இந்த செடியை தெரியாதவர்கள் யாரும் கிராமங்களில் இருக்க முடியாது. இது எல்லா கிராமங்களிலும் இருக்கும் இதற்கு தாத்தப் பூ செடி, தலைப்வெட்டிப் பூ செடி, என பல பெயர்கள் உண்டு.அட அதுக்கென்னங்க நம்ம ஊரிலும் உண்டு என நீங்கள் சொன்னால் உங்கள் ஆயுள் காலம் அதிகம் என்பதாக பொருள்.
அட ஆமாங்க இந்த குட்டிச் செடி ஏராளமான நோய்களை தீர்க்கக் கூடியது. இந்த இலைகளை எடுத்து நன்றாக கழுவி மிளகு ரசத்தில் போட்டு குடித்தால் சளி இருமல், தலை பாரம் , தலை வலி ஆகியவை குறைந்துவிடுமாம்.
எதேச்சையாக உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் இரத்தம் நிற்காமல் சென்றால் அந்த இடத்தில் மூக்குத்திப் பூ இலை சாரை விட்டால் உடனடியாக இரத்தம் அதிகம் போவது நின்று விடும். முழங்கால் வலி, மூட்டு வலி போன்றவற்றிற்கு சிறிது நல்லெண்ணை விட்டு அதில் இலை பூ வேர் போன்றவற்றை போட்டு சிறிது வதக்கி மூட்டு வலி உள்ள இடத்தில் கட்டி விடுங்கள் வலி உடனடியாக தீர்ந்துவிடும்,
அதே போல் தேமல் சொரி போன்றவற்றிக்கு இதன் இலைகளை கழுவி பின் இரண்டு கைகளாலும் கசக்கி
சாற்றுடன் இலைகளை சொரி, தேமல் மீது தேய்க்க வேண்டும், அப்படி இரண்டு மூன்று நாட்கள் செய்யும் போதே தேமல் காணமல் போய்விடும்.. என்ன பிரண்ட்ஸ் இத தகவல் பிடிச்சிருக்கா? அப்பிடின்னா ஷேர் பண்ணுங்க..!!