மலேசியாவில் 8 வயதுச் சிறுமியை மானபங்கம் செய்த நபருக்கு சிறை…!!!
சிங்கப்பூரை சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவர் மலேசியாவில் வசித்து வந்தார். அவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 8 வயதுடைய சிறுமியை மானபங்கம் செய்துள்ளார். இவர் 2017ஆம் ஆண்டு இரண்டு முறை சிறுமியை மானபங்கம் செய்துள்ளார்.
அதனை தொடர்ந்து இந்த நபர் அந்த சிறுமியிடம் குழந்தைகள் தொடர்பான ஆபாசக் காணொலிகளை காட்டியுள்ளார். இந்த நபர் தன்னுடைய குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்காக அவருடைய தண்டனைக் காலம் இரண்டு வாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மனைவி செலுத்திய 100,000 வெள்ளி பிணையில் அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த குற்றத்திற்காக நபருக்கு 4 வருடம் சிறைத்தண்டனையும் 9 பிரம்படியும் விதிக்கப்பட்டுள்ளது.